2
1
4
3

அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வுக்கு பொதுபல சேனா கடிதம் ..




-ARA FAREEL-
நாட்டில் முஸ்லிம் இளை­ஞர்கள் ஆயு­த­மேந்­து­வார்கள். இதை எவ­ராலும் தடுக்க முடி­யாது’ என தாங்கள் விடுத்­துள்ள எச்­ச­ரிக்கை சாதா­ர­ண­மா­ன­தொன்­றல்ல.

இந்­நாட்டு சிங்­கள பெளத்­தர்­க­ளுக்கும் முஸ்­லி­மல்­லா­த­வர்­க­ளுக்கும் எதி­ரான மிலேச்­சத்­த­ன­மான இஸ்­லா­மிய ஜிஹாத் அண்­மையில் வரு­கி­றது என்­பது இந்த எச்­ச­ரிக்­கையின் பின்­ன­ணி­யாகும் என பொது­ப­ல­சேனா அமைப்பு மீள்­கு­டி­யேற்றம் மற்றும் புனர்­வாழ்வு இரா­ஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்­புல்­லா­வுக்கு அனுப்பி வைத்­துள்ள கடி­தத்தில் குறிப்­பிட்­டுள்­ளது.

இந்த எச்­ச­ரிக்கை இந்­நாட்டின் தேசியப் பாது­காப்­புக்கு எதி­ராக செய்­யப்­பட்ட இன­வாத எச்­ச­ரிக்­கை­யாகும். இந்த எச்­ச­ரிக்கை இஸ்­லா­மிய போத­னை­களின் அடிப்­ப­டை­யிலே விடு­விக்­கப்­பட்­டுள்­ள­தென்­பதை நாம் மிகவும் பொறுப்­புடன் கூறு­கிறோம் எனவும் கடி­தத்தில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

2016.12.25 ஆம் திக­தி­யி­டப்­பட்­டுள்ள குறிப்­பிட்ட கடி­தத்தில் மேலும் குறிப்­பி­டப்­பட்­டுள்­ள­தா­வது;
‘குர்­ஆனின் போத­னை­களைக் குறிப்­பிட்­டுக்­காட்டி எழு­தப்­பட்­டுள்ள இந்தக் கடிதம் ஹிஸ்­புல்லாஹ் அமைச்சர் வெளி­யிட்­டுள்ள கருத்­துக்­கான பதி­லாகும்.

இந்­நாட்டில் பெரும்­பான்­மை­யான சம்­பி­ர­தாய முஸ்­லிம்கள் பௌத்த கலா­சாரம் மற்றும் அஹிம்­சை­வாத கோட்­பா­டு­க­ளுக்குள் நீண்­ட­காலம் வாழ்ந்து வரு­கி­றார்கள்.

எனவே அவர்கள் இவ்­வா­றான கருத்­து­க­ளுக்கு எதி­ராக குரல் கொடுக்க வேண்டும்.

நாம் இந்தக் கடி­தத்தில் சுட்­டிக்­காட்­டி­யுள்ள விட­யங்கள் நாட்டில் கல­வ­ரத்தை உரு­வாக்­கு­வ­தற்­கா­க­வல்ல. எதிர்­கா­லத்தில் உரு­வா­க­வுள்ள கல­வ­ரங்­களைத் தடுப்­ப­தற்­காகும். உணர்ச்­சி­க­ளுக்கு அடி­மைப்­ப­டாது. அர­சியல் சண்­டித்­த­னத்தை நிறுத்தி அறி­வூ­பூர்­வ­மான கலந்­து­ரை­யா­ட­லொன்­றுக்கு நல்­லி­ணக்­கத்­துக்­காக முஸ்லிம் புத்­தி­ஜீ­வி­க­ளுக்கு அழைப்பு விடுக்­கிறோம்.

இஸ்லாம் என்­பது இஸ்­லாமே தான். இஸ்லாம் இந்­நாட்டில் மாத்­திரம் மாற்­ற­ம­டையப் போவ­தில்லை.

ஏனைய இஸ்லாம் அல்­லாத நாடுகள் மற்றும் அங்­குள்ள இஸ்­லா­மி­ய­ரல்­லாத மக்­களை முழு­மை­யாக அழித்து செயற்­பட்ட இஸ்­லா­மிய கோட்­பா­டுகள் மற்றும் இஸ்­லாத்­துக்கு கட்­டா­ய­மாக்­கப்­பட்­டுள்ள ஜிஹாத் இந்­நாட்டில் மாத்­திரம் நடை­மு­றையில் இல்லை என இஸ்­லாத்­திலோ குர்­ஆ­னிலோ எந்த இடத்­திலும் குறிப்­பி­டப்­பட்­டில்லை.

ஹிஸ்­புல்லாஹ் அமைச்சர் இஸ்­லா­மிய போத­னை­களின் அடிப்­ப­டையில் விடுத்த எச்­ச­ரிக்கை ஞான­சார தேர­ருடன் மிக சூட்­சு­ம­மாக சம்­பந்­தப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. ஊடக மாநா­டொன்றில் குர்­ஆனின் போத­னைகள் தொடர்­பாக ஞான­சார தேரர் தெரி­வித்த கருத்­துகள் இஸ்­லாத்தை அவ­ம­தித்­துள்­ள­தாகக் குறிப்­பிட்டே எச்­ச­ரிக்கை விடுக்­கப்­பட்­டுள்­ளது.

ஹிஸ்­புல்­லாஹ்வின் எச்­ச­ரிக்­கையின் பின்­ன­ணியில் மறைந்­துள்ள இஸ்­லா­மிய போத­னைகள் மற்றும் முஸ்லிம் தலை­வ­ராக அவர் இதன்­மூலம் எதிர்­பார்த்­துள்­ள­வை­களை நாம் நாட்­டுக்கு பகி­ரங்­கப்­ப­டுத்­து­வ­தற்கு எதிர்­பார்க்­கிறோம்.

அதற்கு முன்பு ஞான­சார தேரர் ஊடக மாநாட்டில் இஸ்­லாத்தை அவ­ம­திக்கும் வகையில் பேசி­னாரா என்­பதை விசா­ரித்து அறி­ய­வேண்டும்.

இந்­நாட்டில் சம­யங்­க­ளுக்­கி­டை­யி­லான நல்­லி­ணக்கம் மற்றும் தேசியப் பாது­காப்­பினைப் பாதிக்கும் வகையில் உள்ள இஸ்­லா­மிய கோட்­பா­டுகள் குர்­ஆனின் சில போத­னை­களை ஞான­சார தேரர் குறிப்­பிட்டு அவற்­றுக்கு விளக்­க­ம­ளிக்­கு­மாறும் அது தொடர்­பாக பகி­ரங்க கலந்­து­ரை­யா­ட­லுக்கு வரு­மாறும் மாத்­தி­ரமே கருத்து வெளி­யிட்­டி­ருந்தார்.

இஸ்­லாத்தின் போத­னை­களை பகி­ரங்­கப்­ப­டுத்­து­வது எவ்­வாறு இஸ்­லாத்தை அவ­ம­திப்­ப­தாகும் என்­பதை ஹிஸ்­புல்­லாஹ்வும் ஏனைய இஸ்­லா­மிய இயக்­கங்­களும் எமது சமூ­கத்­துக்கு தெளி­வு­ப­டுத்த வேண்டும்.

இவ்­வாறு செயற்­ப­டாது ஞான­சார தேரரின் ஊடக மாநாட்டின் பின்பு இஸ்­லா­மிய அமைப்­பு­களும் முஸ்லிம் தலை­வர்­களும் மண்­ணெண்­ணையில் பட்ட பாம்­பு­களைப் போல் குழப்­ப­ம­டைந்­துள்­ளமை எமது சமூ­கத்­துக்குள் ஏதோ­வொன்­றினை மூடி மறைக்கும் முயற்­சி­யல்­லவா?

இஸ்லாம் என்­பது முஸ்லிம் மக்­களின் வாழ்க்கை குர்ஆன் அந்த வாழ்க்­கையை அமைத்துக் கொள்­வ­தற்­கான வழி­காட்டி என்றே இஸ்­லா­மி­யர்கள் எம்­மத்­தியில் தெரி­விக்­கி­றார்கள் என்­றாலும் அந்த இஸ்­லா­மிய போத­னைகள் என்ன என்­பதை முஸ்லிம் மக்கள் பகி­ரங்­க­மாக வெளிப்­ப­டுத்­த­வில்லை.

இந்­நி­லையில் குர்­ஆனைப் பற்றி ஞான­சார தேரர் வெளி­யிட்­டுள்ள விப­ரங்கள் இலங்­கையின் முழுச் ­ச­மூகமும் மிகவும் பார­தூ­ர­மாக கவ­னத்திற் கொள்ள வேண்­டி­யுள்­ளது.

குர்ஆன் மற்றும் ஹதீஸின் போத­னை­க­ளின்­படி இஸ்­லாத்தின் ஒரே இலக்கு படி­மு­றை­யான செயற்­பா­டு­க­ளினால் முஸ்லிம் அல்­லாத சமூ­கங்கள் ஏனைய மதங்­களின் சின்­னங்கள் என்­ப­வற்றை அழித்து அந்­நாட்டை முழு­மை­யாக கைப்­பற்­றிக்­கொள்­வ­தாகும்.  பின்பு இந்த பூமியை இஸ்­லா­மி­யர்­க­ளுக்கு மாத்­தி­ர­மான பூமி­யாக மாற்றிக் கொள்­வ­தாகும்.

இந்­நாட்டில் முஸ்­லிம்கள் பலம் பெறு­வ­தற்கு முன்பு இஸ்­லாத்தின் மிலேச்­சத்­த­ன­மான போத­னைகள் என்ன என்­பது இந்­நாட்­டுக்கு தெரி­ய­வந்தால் நிச்­ச­ய­மாக இஸ்­லாத்தின் ஆடை­க­ளைந்து அதன் மிலேச்­சத்­தனம் நிர்­வா­ண­மாகும்.

அல்­லாஹ்வின் பாதை அழிந்து போவதை  தடுக்க முடி­யாமற் போகும். இஸ்­லா­மிய அமைப்­புகள் மற்றும் முஸ்லிம் தலை­வர்­க­ளுக்கு இது பற்றி மிகவும் தெளி­வுள்­ளது.

ஞான­சார தேரரின் இஸ்­லாத்தைப் பற்­றிய வெளிப்­ப­டுத்­தல்­களின் பின்பு இஸ்­லா­மிய அமைப்­புகள் மற்றும் முஸ்லிம் அர­சியல் தலை­வர்கள் மதத்­த­லைவர் குழப்­ப­ம­டைந்­துள்­ளார்கள். இதே­வேளை ஹிஸ்­புல்லாஹ் அமைச்சர் உட்­பட முஸ்லிம் அர­சியல் தலை­வர்கள், மதத்­த­லை­வர்கள், இஸ்­லா­மிய அமைப்­புகள் ஞான­சார தேர­ருக்கு எதி­ராக நட­வ­டிக்கை எடுக்­கும்­படி அர­சாங்­கத்­துக்கு அழுத்தம் கொடுக்­கி­றார்கள்.

ஹிஸ்­புல்­லாஹ்வின் எச்­ச­ரிக்­கையின் பின்­ன­ணியில் மறைந்­துள்ள இஸ்­லா­மிய போத­னைகள் என்ன என்­பதை அறி­வது எமது நாட்டின் எதிர்­கால பாது­காப்­புக்கு மிகவும் அவ­சி­ய­மா­ன­தாகும்.

முஸ்லிம் இளை­ஞர்கள் விரைவில் ஆயு­த­மேந்­து­வார்கள். அதைத் தடுப்­ப­தற்கு எவ­ராலும் முடி­யாது. என ஹிஸ்புல்லாஹ் கூறியிருக்கிறார் அவ்வாறு அவர் ஆயுதமேந்தி களத்தில் குதிப்பது இந் நாட்டின் பாதுகாப்பு பிரிவினருக்கும் நிராயுதபாணிகளான பௌத்த மக்களுக்கு எதிராக என்பது தெளிவாகும்.

அவர் இவ்வாறான பாரதூரமான கருத்தினைத் தெரிவித்திருப்பது முஸ்லிம் சமூகத்தில் இவ்வாறான சதி முயற்சியொன்று உருவாகிவருகிறது. கட்டியெழுப்பப்படுகிறது என்பதினாலாகும். அவர்கள் இதற்காக ஆயுதங்களை இரகசியமான முறையில் சேகரிப்பதனாலாகும்.

இஸ்லாமிய போதனைகளின்படி இவ்வாறு செயற்பட்டு ஏனைய மதத்தவர்களிடம் பீதியை ஏற்படுத்துவதாகும் எனக் குறிப்பிட்டுள்ள கடிதத்தில் குர்ஆன் ஆயத்துக்கள் சிலவற்றுக்கும் சஹீஹ் அல்புஹாரி ஹதீஸ்களுக்கும் விளக்கங்கள் கோரப்பட்டுள்ளன.

ஹிஸ்­புல்லாஹ் கருத்து
 பொது­ப­ல­சேனா அமைப்­பினால் குர்ஆன் ஹதீஸின் சில பிரி­வு­க­ளுக்கு விளக்கம் மின்­னஞ்சல் மூலம் அனுப்­பப்­பட்ட கடிதம் மூலமே கோரப்­பட்­டுள்­ளது.

கடிதம் அனுப்­பி­ய­வரின் கையொப்பம் பதிவு செய்­யப்­ப­ட­வில்லை. கடி­தத்­துக்கு பதில் நிச்­சயம் அனுப்­புவேன். அதே­வேளை கையொப்பம் எது­வு­மில்­லாமல் கடிதம் அனுப்­பி­ய­தற்­கான விளக்­கத்தை பொது­ப­ல­சே­னா­விடம் கோரி­யி­ருக்­கிறேன்.

‘முஸ்லிம் இளை­ஞர்கள் ஆயு­த­மேந்­து­வார்கள். இதை எவ­ராலும் தடுத்து நிறுத்த முடி­யாது’ என்ற எனது கருத்­தையும் விமர்­சித்­தி­ருக்­கி­றார்கள். அதற்கு பதி­ல­ளிக்­கவும் தயா­ராக இருக்­கிறேன் என மீள்­கு­டி­யேற்றம் மற்றும் புனர்­வாழ்வு இரா­ஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்­புல்லாஹ் தெரி­வித்தார்.

பொது­ப­ல­சேனா அமைப்­பினால் அவ­ருக்கு அனுப்­பி­வைக்­கப்­பட்­டுள்ள கடிதம் தொடர்பில் விளக்கம் கோரி­ய­போதே அவர் இவ்­வாறு கூறினார். அவர் தொடர்ந்தும் பதி­ல­ளிக்­கையில் தெரி­வித்­த­தா­வது;

குர்ஆன் மற்றும் ஹதீஸின் சில அத்­தி­யா­யங்­க­ளுக்­கான விளக்­கங்­களும் கோரப்­பட்­டுள்­ளன. குர்­ஆ­னையும் ஹதீ­ஸையும் அவர்­க­ளுக்குத் தெளி­வு­ப­டுத்த வேண்­டி­யது அவ­சி­ய­மாகும்.

பொது­ப­ல­சேனா அமைப்பு உத்­தி­யோ­க­பூர்வ கையொப்­பத்­துடன் கடிதம் அனுப்­பினால் பதில் அனுப்பப்படும்.

பிரபல்யமான உலமாக்களைக் கொண்ட குழுவொன்றினை அமைத்து அக்குழு மூலமே பதில் தயாரிக்கப்படும் என்றார்.
அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வுக்கு பொதுபல சேனா கடிதம் .. அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வுக்கு பொதுபல சேனா கடிதம் ..     Reviewed by ADMIN on 10:57 AM Rating: 5

No comments: